இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

யோசி…
உருளும் உலகில்
நிகழும் வாழ்வு
நிதமும் நிரப்பும்
பட்டறிவே பகிர்வு
பாடமாய் யோசி
விட்டே அகன்ற
விரயத்தனமும்
வீணே போக்கும்
காலக் கரைவும்
பெற்றே தந்த
பேறுகள் யோசி
கற்றவை பெற்றவை
கடமையின் வழிகள்
உரைக்கும் பாடமே
உணர்வென யோசி
புலமை பூக்கும்
புதுமை யோசி
புரட்சி உலகை
புகுத்திட யோசி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading