இரா. விஜயகௌரி

விடைதரவா செல்வமே……..

கொதித்துப் பிளந்து
கோபக்கடலில். வெடித்துச் சிதறி
வேகச் சரிவினில். நொருங்கி
சரிந்த சுவர்களின். நடுவே அவள்

பிழந்த பூமியின் இடுக்குகளிடையே
மென்தளிர் மகளாள் கசங்கிக் கிடக்கிறாள்
துருக்கியின் செல்வம் துவண்டது
துடிப்பை. அடக்கி நின்றனள்

அவள் கரங்களின் பிடியை விடாது
விட்டுப் பிரிந்திட முடியா. தந்தை
அனலின் நடுவில் அமர்ந்த சோகம்
அணைத்திட முடியா பாசத் தவிப்பு

இன்னமும் நான் மட்டுமேன்
உயிர்க்கூடு சுமக்கிறேன்
கேள்விகள் துளைக்க 2023
மாசித்திங்கள் 6இன் பதிவெழுதும்
சுவடாய் இவர்கள்

கனக்கிறது இதயம்
கசிகிறது. விழிகள்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading