அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

Selvi Nithianandan

புழுதிவாரி எழும் மண்வாசம்

புழுதிவாரி எழும் மண்வாசம்
புவனத்தில் வந்திடுமே தனிவாசம்
இருண்டு விடும் விண்ணும்
முழங்கி விடும் மேகமும்
ஏன் வருவாய் நீயும்
என்ன செவ்வாய் சொல்லு

மாமழையாய் வந்திடுவேன் மண்ணில்
மானிடமும் மழையாலே நனையும்
மனங்களும் மகிழ்ச்சியாலே துள்ளும்
மண்ணும் மனமுவந்து போகும்

ஈரமண்ணின் வாசம் ஈர்த்திடுமே உயிர்கள்
ஈரடிகவி போல இணைந்திடுமே பலவும்
ஈடு கொடுத்து பலஉயிரும் வாழுதே
ஈற்றில் பறவை கூட ஒருநாள் வருகுதே
ஏன் பறந்து வந்தாய் நீயும்
எதற்க்கு வந்தாய் சொல்லு
ஈசலாய் உயிர்பெற்று வாழுகிறேன்நானே
வந்த நாளே இறந்துடுவேன் தானே

சேவல் பேடு இணைந்திடுமே வாழ்வு
சேவகனாய் காவல் அரண்கூடு
சேறு சகதி அழைந்துதானே செல்வாய்
சேதி என்ன வென்று சொல்வாய்
சேற்றில் உள்ள பூச்சி புழு உண்ண
சேகரிப்பில் இருப்பதெல்லாம் வந்திடுமேமெல்ல

குவலயத்தில் புழுதிவாரி மண்வாசம்கூட
குறுங்கவியும் இப்போ பாடலாக மாறும்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading