16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
வசந்தா ஜெகதீசன்
புழுதி வாரி எழும் மண்வாசம்..
புழுதி நிலக் காற்றே
புவி நிலத்து மூச்சே
கொஞ்சம் நீ நில்லு
மண் வாசம் சொல்!
பருவங்கள் தோறும் என் பாதைகள் மாறும்
பயிரினத்தை தழுவி நிதமாக வாறேன்
மலரினங்கள் கோடி மண்வாசம் சூடி
என்னோடு உறவே எண்ணங்கள் நிறைவே!
வளம் தந்து வரம்பாக்கும் நிலத்தாயே நானும்
வயல் தோறும் விதைப்பாகும் படர்கொடியின் வேரே
என்னோடு சொந்தம் எனக்கான விதைப்பு
உன்னாலே எதுவும் உறவல்ல காற்றே!
காற்றென்னை விலத்தி காரியங்கள் உண்டோ
நீராகும் சுழற்சி என்னோடு முயற்சி
நிதமாகும் சுவாசமே என்காற்றின் மூச்சே!
ஐம்பூத இயல்பில் ஐக்கியங்கள் நாமே
நீ வேறு நான் வேறு நிஜமற்ற போட்டி
ஓன்றோடு ஓன்றாய் ஓற்றுமையின் சாட்சி
புழுதியினை வாரி மண்வாசம் வீசும்
காற்றாக நானும் நிலமாக நீயும்
நீர்கொண்டு செழித்து நெருப்பாக சமைத்து
ஆகாயக் குடைக்குள் அடைக்கலம் அவனி!.
நன்றி
மிக்க நன்றி

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...