திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
சிவமணி புவனேஸ்வரன்.
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*சாதனை*

அடிமை விலங்கை உடைத்திடவும்
அறிவும் ஊட்டிக்
கொடுத்திடவும்

அழகாய் உலகை
ஆண்டிடவும்
அல்லல் அற்று வாழ்ந்திடவும்

அன்பின் ஊற்றால் அழகாய் உலகை
அனைவரும்
நிறைக்க வாருங்கள்

வன்பே இல்லா வாழ்வில் பூக்கும்
பாச மலரைப் பாருங்கள்

நைந்தே உருகிய நைற்றிங் கேளும்
நலமாய் உலகை
காத்தாரே
கைகள் தாங்கிய
அன்னை திரேசா
கருணை மழையை
பொழிந்தாரே

அன்பாம் விளக்கை
அழகாய் ஏந்தி
அருளாம் ஒளியைத்
தந்தாரே

வேதனை தீர்க்க விழித்தே எமக்கோ
போதனைப் பொருளும்
ஆனாரே
சோதனை பலவும்
கண்ட போதும்
சாதனை உலகைப்
படைத்தாரே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading