கெங்காஸ்ரான்லி

வாழ்ந்த சுவடுகள்
——-
மூத்தோர் வழிநடத்தல்
முன்னைய புண்ணியமாகும்
வாழ்ந்தோர் அனுபவங்கள்
நாம் படிக்கும் புத்தகமாகும்
அவர் சொல்லும் அறிவுரைகள்
வேம்பாக்க் கசக்கும்
ஆழ்ந்ததனைச் சிந்தித்தால்
அத்தனையும் பொக்கிசமாகும்
வாழ்க்கையின் முக்கிய படிவங்கள்
வாழவந்தோர் காணும் உண்மைகள்
காலம் காட்டும் சில கண்ணாடி
கானல் நீரின்ஒளி நிழலாகும்
முதியோரை மதித்தல் முக்கிய கடமையாகும்
முன்னின்று செய்யும் உதவி
ஊழ்வினையை அகற்றி விடும்
மதியாத மனிதர்கள் மதிகெட்டு போகையில்
விதிகூட விளையாடும் வித்தை பொருளாக
சுவடுகள் சுவையானது சுவர்க்க பூமியில்
கபடு ஏதுமில்லா கண்ணியம் நிலையானது
ஏட்டில் எழுதப்படும் காவியங்கள் இங்கே
எடுத்துரைக்கும் வாழ்ந்த சுவடுகள்
வடித்து வைத்த ஓவியங்கள்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading