” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

தரணியில் பெண்கள்

உருளும் உலகில் பெண்ணின் பெருமை
உயர்வின் பிடியில் மகிழ்வின் சிறப்பு
உலகை ஆளும் திடத்தின் வலிமை
உவகை கொள்ளும் ஆளுமையாகும்

விண்ணிலும் மண்ணிலும் பற்பல சோதனை
வியத்தகு பெண்களின் விருட்சமாய் சாதனை
தடைகளை உடைத்து நம்பிக்கை கொண்டு
தளராத மனத்தால் அதிஉச்சம் கண்டனரே

ஆணுக்கு பெண்சரி நிகர் என்றும்
அடுக்களை தாண்டி அனிமேசன் வரை
அத்தனை துறையும் ஆளுமை ஊன்றி
அவனிக்கு கிடைத்த அற்புதச் சான்று

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
அகப்பை பிடித்த கரம் அன்று
நவீனத்தில் மங்கைகள் இன்று
உழைப்பிலே உயர்ந்தவளாய் வென்று
உலகையும் ஆளுகின்றாள் நன்றே

Nada Mohan
Author: Nada Mohan