கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Selvi Nithianandan

தரணியில் பெண்கள்

உருளும் உலகில் பெண்ணின் பெருமை
உயர்வின் பிடியில் மகிழ்வின் சிறப்பு
உலகை ஆளும் திடத்தின் வலிமை
உவகை கொள்ளும் ஆளுமையாகும்

விண்ணிலும் மண்ணிலும் பற்பல சோதனை
வியத்தகு பெண்களின் விருட்சமாய் சாதனை
தடைகளை உடைத்து நம்பிக்கை கொண்டு
தளராத மனத்தால் அதிஉச்சம் கண்டனரே

ஆணுக்கு பெண்சரி நிகர் என்றும்
அடுக்களை தாண்டி அனிமேசன் வரை
அத்தனை துறையும் ஆளுமை ஊன்றி
அவனிக்கு கிடைத்த அற்புதச் சான்று

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
அகப்பை பிடித்த கரம் அன்று
நவீனத்தில் மங்கைகள் இன்று
உழைப்பிலே உயர்ந்தவளாய் வென்று
உலகையும் ஆளுகின்றாள் நன்றே

Nada Mohan
Author: Nada Mohan