மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

தரணியில் பெண்கள்

உருளும் உலகில் பெண்ணின் பெருமை
உயர்வின் பிடியில் மகிழ்வின் சிறப்பு
உலகை ஆளும் திடத்தின் வலிமை
உவகை கொள்ளும் ஆளுமையாகும்

விண்ணிலும் மண்ணிலும் பற்பல சோதனை
வியத்தகு பெண்களின் விருட்சமாய் சாதனை
தடைகளை உடைத்து நம்பிக்கை கொண்டு
தளராத மனத்தால் அதிஉச்சம் கண்டனரே

ஆணுக்கு பெண்சரி நிகர் என்றும்
அடுக்களை தாண்டி அனிமேசன் வரை
அத்தனை துறையும் ஆளுமை ஊன்றி
அவனிக்கு கிடைத்த அற்புதச் சான்று

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
அகப்பை பிடித்த கரம் அன்று
நவீனத்தில் மங்கைகள் இன்று
உழைப்பிலே உயர்ந்தவளாய் வென்று
உலகையும் ஆளுகின்றாள் நன்றே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading