Selvi Nithianandan

விடியல்

ஆதவனின் விடியல்
அவனிக்கே மகிழ்வு
ஆனந்தமாய் இருக்குமே
அற்புதச் சிறப்பு

கிழக்கின் உதயம்
மேற்கின் மறைவு
வடக்கு தெற்கு
திசையும் இணைவு

விடியலின் மலர்வில்
பூக்களும் மலரும்
விசும்பின் ஒளியால்
விருட்சமும் மகிழும்

விடியும் காலை
விருப்புடன் எழுந்து
பொறுப்பாய் நடந்து
பெருமிதம் கொள்ளு

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading