Selvi Nithianandan

விடியல்

ஆதவனின் விடியல்
அவனிக்கே மகிழ்வு
ஆனந்தமாய் இருக்குமே
அற்புதச் சிறப்பு

கிழக்கின் உதயம்
மேற்கின் மறைவு
வடக்கு தெற்கு
திசையும் இணைவு

விடியலின் மலர்வில்
பூக்களும் மலரும்
விசும்பின் ஒளியால்
விருட்சமும் மகிழும்

விடியும் காலை
விருப்புடன் எழுந்து
பொறுப்பாய் நடந்து
பெருமிதம் கொள்ளு

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading