ஜெயம் தங்கராஜா

சசிச

தவிப்பு

உள்ளத்திற்குள்ளே ஏனோ தவிப்பு
சொல்லமுடியாத ஒருவித உத்தரிப்பு
உள்ளதை இல்லையென்று மறைப்பு
சொல்லாது இருந்துவிடின் சிறப்பு

சத்தம்போட்டு மனவலியைக் கூறிடலாம்
அத்தனையும் கேலியாக மாறிடலாம்
புத்தனாக இயேசுவாக எவரின்று
சுத்தமற்ற பாரென்று பாரின்று

நிலத்தைவிட்டு வந்திருக்கக் கூடாது
புலத்தினிலே இருந்திருக்கலாம் ஆடாது
பழகியவர் எல்லாம் நெருங்கி
விலகிப் போனார்கள் ஒதுங்கி

தனித்துவிட்டதை போன்ற கொடுமை

பிணிகளை சுமந்தபடி முதுமை
துணிந்துவிட்டேன் வருவதெல்லாம் தாங்க
இனிமேலும் கவலையில்லை ஏங்க

சுவருக்கும் காதுண்டு மீறிவிட்டேன்
எவரிடமும் கூறாததைக் கூறிவிட்டேன்
அவதியால் அமைதியை மீறினேன்
தவறை தவறென்று கூறினேன்

உத்தரிப்போடு பயணம் தொடரலாம்
சித்திரவதைப்பட்டு கால்கள் இடறலாம்
சித்தம் கலங்கப் போவதில்லை
அத்தன் துணையிருக்க பயமில்லை.

ஜெயம் தங்கராஜா
03-04-2023

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading