இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

எதிர்காலம் எதற்குள்….
தொழில்நுட்பம் வளர்ந்திட தொன்மை குன்றுது
அண்மைக் காலமாய் அதிகமாய் மாறுது
அவரவர் வாழ்வில் அவசர ஒட்டம்
உறவும் பற்றும் உயிர்ப்பற்ற தோற்றம்
எதிலுமே பிடிப்பற்ற காலத்தின் சுழற்சி
எங்கே தான் போகுமோ எதிர்காலப் புரட்சி
பசுமையாய் உலகு வெறுமையாய் மனது
பயிர்களில் செயற்கை உரத்திலே உணவு
கரிசனை குன்றுது காலமும் நகருது
நோய்களும் வளருது மருத்துவம் ஆளுது
மனிதமே எங்கே மறுமலர்ச்சியின் சுவடு
விடியலா இருளா விந்தை நிறைக்குது
எதிர்கால ஏற்றம் எதற்குச் சான்று
உலகை வெல்வது மனிதமா இணையமா.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading