கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

எதிர்காலம் எதற்குள்….
தொழில்நுட்பம் வளர்ந்திட தொன்மை குன்றுது
அண்மைக் காலமாய் அதிகமாய் மாறுது
அவரவர் வாழ்வில் அவசர ஒட்டம்
உறவும் பற்றும் உயிர்ப்பற்ற தோற்றம்
எதிலுமே பிடிப்பற்ற காலத்தின் சுழற்சி
எங்கே தான் போகுமோ எதிர்காலப் புரட்சி
பசுமையாய் உலகு வெறுமையாய் மனது
பயிர்களில் செயற்கை உரத்திலே உணவு
கரிசனை குன்றுது காலமும் நகருது
நோய்களும் வளருது மருத்துவம் ஆளுது
மனிதமே எங்கே மறுமலர்ச்சியின் சுவடு
விடியலா இருளா விந்தை நிறைக்குது
எதிர்கால ஏற்றம் எதற்குச் சான்று
உலகை வெல்வது மனிதமா இணையமா.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan