மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

சுடர்

மாயிருள் போர்வையை அகற்றி விடும்
பேயிருக்கும் கண்டு இதனை போயிருக்கும்
ஞாயிறு உண்டாக்கிடும் பகலை செங்கதிரால்
தேயினும் உருக்கி பெருக்கிவிடும் நிலவும்

சோதிமயமானவரே இந்த பிரபஞ்ச நாயகன்
ஆதி முதலாய் முன்னோர்களின் இறை
மோதினால் சருகுகளை பஸ்பம் ஆக்கிவிடும்
மேதினியின் செல்வமே இருளகற்றும்  விளக்கு

ஒரு பொருள் உருக வேண்டுமானால்
பெருக வேண்டும் ஒளியும் அதனால்
துருவப் பனியும் மெழுகனவே கரையும்
திருமந்திரத்திலும் இருக்கின்றது அக்கினியின் உரையும்

உள்சூடும் மிகுந்தால் உடம்பும் இளைத்துவிடும்
இல்லாமல் வெப்பம் செரிமானமும் பசியுமில்லை
தொல்லை தரவெனவே குளிரும் அடம்பிடிக்கும்
சொல்வேனொன்று சுடர் இரையாகின்றது இறையுமாகின்றது

ஜெயம்
09-04-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading