16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
வசந்தா ஜெகதீசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
விருப்புத்தலைப்பு
அன்னையர் தினமே….
வரமாய் கிடைத்த உறவிது
வாஞ்சை நிறைந்த உளமிது
உறவாய் போற்றும் உள்ளன்பு
உதிரம் கலந்த தாயன்பு
புவனம் போன்ற பொறுமையும்
ஐக்கியம் காக்கும் தகமையும்
அன்பின் ஊற்றாய் அணிகலனாய்
பண்பில் பலதை வேதமாய்
பக்குவமான பட்டறிவை
பாசம் நிறைத்து பகிர்பவர்
சேய்கள் வாழ்வு செம்மைபட
சிரத்தை காட்டும் பேரன்பே
கடினம் பலதைக் கடந்துமே
காக்கும் தெய்வம்
தாய்மையே
என்றும் எமக்காய் வாழ்பவர்
எதிலும் உறவாய் திகழ்பவர்
ஈடிணையற்ற தாயன்பு
ஈகம் நிறைந்த பேரன்பு.
நன்றி
மிக்க நன்றி
*14.5.23.ஐரோப்பாவில் அன்னையர் தினம்)*

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...