கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

காணி

தென்னை பனைமரத் தோப்பும் சிதைவடைய
ஒன்றாய் வாழ்ந்தவீடும் ஒவ்வொன்றாய்க் களவுபோக
மல்லிகைப் பந்தலும் மலர்களின் வாசனையும்
உல்லாச வாழ்வும் உருக்குலைந்தும் போக

எங்கள் காணி எங்கே எனத்தேடல்
அங்கிருந்த வேலியின் எல்லையையும் காணோம்
ஒட்டி உறவாடிய உறவையுமே காணோம்
பட்டியில் நின்ற பால்மாடையும் காணோமே

பந்தமும் குலைய பட்டியும் குலைந்து
சொந்தக் காணியும் சருகுகள் மூட
வெந்து மனமும் வேதனையில் வாடுகிறோம்
இந்தப் புலப்பெயர் இருப்பிடத்தில் இருந்தே….

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading