சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

இரா விஜயகௌரி

வெறுமை போக்கும் பசுமை…….

பசுமை போர்த்தும் மகளாள் -இவள்
எழிலின் வனப்பே. உயிர்ப்பூ
வளங்கள் நிறைத்த பேரெழிலை
வழங்கிடும் அழகே வளர்ச்சி

நீர்மகள் நிலமகள் இணைந்து
எழுதிடும் காவியம் பசுமை
உயிர்த்தீ. வதைத்திடும் வறுமை
அதை களைந்திடும் வேரே பயிர்தாம்

வெறுமையை. மனதுள் விதைக்கும்
வறுமையின் நிலைதான் முடக்கம்
சிறுமைகள். களைந்ததோர் சீர்தான்
செழித்தெழும் பெருவளம். பசுமை

தினமும். ரசித்திட. வைக்கும்
பலமும் திடமும நிறைக்கும்
வளங்களை வார்த்தெழும். செழுமை
அங்கு நிலைபெறும். வாழ்வியல் வளர்ச்சி

மண்ணும் நீரும். மலரும் செடியும்
உறவின் பிணைப்பை. வரைந்து
உலகின் உயிர்களை உயிர்ப்பொடு. ஏற்று
இருகரம் தாங்கிடும் புரட்சித்தளையே பசுமை

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading