ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

க.குமரன் 11.5.23

வியாழன் கவி
ஆக்கம் 113

வெறுமை போக்கும் பசுமை

குழை தளை
கும்பல் குவியல்
கூட்டிப் பெருக்கி
கூட்டுப் பசளையாகுது !

இயற்கை பசளை
இன்னல்கள் அற்றது
உயிரியல் பொருள்கள்
உடலுக்கு வலுவாகுது!

மண்ணை பார்த்து உழைத்தால்
மனதுக்கு களிப்பு
காலமும் கால நிலையும்
கூடித்தரும் அறுவடை செழிப்பு

ஊண் உடம்பு வேர்த்து
உடல் உறுதி பெற்று
பாடுபடும் உழைப்பு
பலன் தருமே
பாருக்கு என்றும்!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading