இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

க.குமரன் 11.5.23

வியாழன் கவி
ஆக்கம் 113

வெறுமை போக்கும் பசுமை

குழை தளை
கும்பல் குவியல்
கூட்டிப் பெருக்கி
கூட்டுப் பசளையாகுது !

இயற்கை பசளை
இன்னல்கள் அற்றது
உயிரியல் பொருள்கள்
உடலுக்கு வலுவாகுது!

மண்ணை பார்த்து உழைத்தால்
மனதுக்கு களிப்பு
காலமும் கால நிலையும்
கூடித்தரும் அறுவடை செழிப்பு

ஊண் உடம்பு வேர்த்து
உடல் உறுதி பெற்று
பாடுபடும் உழைப்பு
பலன் தருமே
பாருக்கு என்றும்!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading