16
Jul
நேவிஸ் பிலிப் கவி இல(634)
சின்னஞ் சிறு வயதினிலே
சிட்டாய் சிறகடித்து
துள்ளியோடி விளயாடி
பள்ளிசென்ற இன்ப...
15
Jul
மாறியதே வாழ்க்கை…
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-10
11-05-2023
வெறுமை போக்கும் பசுமை
பசுமையில் காண்போம் குளிர்ச்சி
மனங்களில் அகலும் வறட்சி
மரங்களை நட்டால் எழில்ச்சி
வேண்டாம் இனியும் எம் இனத் தளர்ச்சி
காடு களனிகளை இழந்து நாடுகளற்றவர்களாய்
அலைந்து ஓட
குண்டுமழைகளும் பொழிய
முற்சியற்றவர்களாய் வாழ
பூக்களும் காய்களுமாய் தொலைய
பசுமை இழந்த வெறுமைக்
கோலம் வேண்டாம் இனியும்.
பச்சை மரங்களை நாட்டி இச்சைக்கேற்றவற்றைத் தேடி
அற்றவர்க்கு ஈந்து கொடுக்க
மற்றயவை போக்கும் வெறுமை.
மனங்களில் கனங்கள் இறங்கி
வனங்களில் பழங்கள் ஏறி
எம் இனங்கண்டு சேர்ந்து வாழ்ந்து இன்பமாய் வாழ்வோம் என்றுமே..
நன்றி
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...