” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1816!

பொசுக்கிய தீயும்
பூத்திட்ட பொலிவும்!!

தமிழர் பண்பாட்டின்
பேராலயம் எரியூட்டி
ஆண்டுகள் நாபத்துடன்
இரண்டு
நயமாய்க் கடந்தும்
நம் மனங்களில்
அதன் வடுக்கள் இன்னும்
தங்கியே விட்டது!!

தென்கிழக்காசியாவின்
பெரும் நூல் அகம்
அக்கினிக்குள் சங்கமம் காண
அக்கினிக் குஞ்சுகளாய் அவை
மீண்டெழுந்தும்
மூலம் எரிக்கப்பட்டது
பெரும் துரோகமே!!

அறிவின் இருப்பிடம்
பண்பாட்டின் மையம்
பலர் முயற்சியின் தேட்டம்
பேரினவாத அரக்கத்
தனத்தால் அழிந்தது
ஆற்றொணாத் துயரம்
துரோகத்தின் சாட்சியம்!!

புதுப் பொலிவுடன்
அன்னைத் தமிழாய்
மீள எழுந்து நிற்கும்
நூலகத் தாய் ஆக்குவாள்
இன்னும்
ஆற்றலுடை மாந்தரை
கூட்டுவாள் தமிழர்
பண்பாட்டின் வேர்களை
வீழ்வது நியதியானாலும்
எழுந்து நிற்பது நீதி
என்பதைப் பறை சாற்றி”!!
சிவதர்சனி இராகவன்
24/5/2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading