அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.06.23
கவி ஆக்கம் -105
ஆறுமோ ஆவல்

ஆறுமோ ஆவல் -என்றும்
தேறுமோ அறை கூவல்

நாறியே சாவல் -இனறும்
நாற்றிசையும் குறை கூறல்

அதிகாலை கூவும் சேவலும்,
அம்மா என அலறும் பசுவும்,
நன்றியான நாயும்,ஆடு,
பூனையும் நியாயம் கூறிடுமோ

முழுமூச்சாய் உழைத்த முதுசமோ
கழுதை உண்ட கடதாசி ஆயிடுச்சு

விழுதாய் ஊன்றிய சாமி
முழுதாய் புத்தர் பூமியாய்
மாறிடுச்சு

உழுது உண்ட வயலோ
பழுதான உரமோடு
பூச்சி புழு உண்டு
பூகம்பம் போலாயிடுச்சு

ஆவலோடு ஆவலாய்க்
காத்திருககும் அன்றைய வாழ்வு
இன்றும் தோன்றிடுமோ
இல்லை மீண்டும் நாறிடுமோ

ஆறுமோ ஆவல்
கூறுமோ ஏவல்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading