சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.06.23
கவி ஆக்கம் -105
ஆறுமோ ஆவல்

ஆறுமோ ஆவல் -என்றும்
தேறுமோ அறை கூவல்

நாறியே சாவல் -இனறும்
நாற்றிசையும் குறை கூறல்

அதிகாலை கூவும் சேவலும்,
அம்மா என அலறும் பசுவும்,
நன்றியான நாயும்,ஆடு,
பூனையும் நியாயம் கூறிடுமோ

முழுமூச்சாய் உழைத்த முதுசமோ
கழுதை உண்ட கடதாசி ஆயிடுச்சு

விழுதாய் ஊன்றிய சாமி
முழுதாய் புத்தர் பூமியாய்
மாறிடுச்சு

உழுது உண்ட வயலோ
பழுதான உரமோடு
பூச்சி புழு உண்டு
பூகம்பம் போலாயிடுச்சு

ஆவலோடு ஆவலாய்க்
காத்திருககும் அன்றைய வாழ்வு
இன்றும் தோன்றிடுமோ
இல்லை மீண்டும் நாறிடுமோ

ஆறுமோ ஆவல்
கூறுமோ ஏவல்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading