அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

எழுத்தின் வித்தே
பூத்தெழு தமிழே…

உயிர்ப்பின் உதயம்
ஊற்றின் சுவாசம்
மொழியின் நாற்றே
முகவரித் தமிழே
பாமுக வனப்பாய்
பைந்தமிழ் எழிலாய்
வீரியம் நிறைக்கும்
வீறுகொள் எழிலே
வியப்பின் தமிழே
ஊடக மொழியாய்
உறங்காத் தமிழாய்
அடுத்த தலைமுறை
நோக்கிய இலக்கு
அருந்தமிழ் பூக்கும்
காவியப் படைப்பு
எண்ணதிசை ஒளிரும்
ஏற்றமே பெருகும்
வண்ணத் தமிழில்
வாஞ்சை நிறைக்கும்
உலக மொழியாய்
உயர்வை நிமிர்த்தும்
கன்னல் மொழியே
வித்தாய் வீழ்ந்தாய்
விழுதின் விருட்சமே
இளையவர் திறனும்
அழகிய படைப்புக்கள்
அனுதினத் தொகுப்புக்கள்
பெருகிடும் பெருமை
யார் தரும் நிலமை
பாடுகள் பலதாய்
பட்டிடும் போதிலும்
சுட்டிடும் பொன் போல்
ஒளிர்ந்திடும் நேயர்கள்
வற்றாச் சுரங்கத்தின்
வலம்புரியே!
வள்ளல்ப் பெருந்தகையோர்
வாழிய வாழியவே!.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading