15
Jul
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
வசந்தா ஜெகதீசன்
எழுத்தின் வித்தே
பூத்தெழு தமிழே…
உயிர்ப்பின் உதயம்
ஊற்றின் சுவாசம்
மொழியின் நாற்றே
முகவரித் தமிழே
பாமுக வனப்பாய்
பைந்தமிழ் எழிலாய்
வீரியம் நிறைக்கும்
வீறுகொள் எழிலே
வியப்பின் தமிழே
ஊடக மொழியாய்
உறங்காத் தமிழாய்
அடுத்த தலைமுறை
நோக்கிய இலக்கு
அருந்தமிழ் பூக்கும்
காவியப் படைப்பு
எண்ணதிசை ஒளிரும்
ஏற்றமே பெருகும்
வண்ணத் தமிழில்
வாஞ்சை நிறைக்கும்
உலக மொழியாய்
உயர்வை நிமிர்த்தும்
கன்னல் மொழியே
வித்தாய் வீழ்ந்தாய்
விழுதின் விருட்சமே
இளையவர் திறனும்
அழகிய படைப்புக்கள்
அனுதினத் தொகுப்புக்கள்
பெருகிடும் பெருமை
யார் தரும் நிலமை
பாடுகள் பலதாய்
பட்டிடும் போதிலும்
சுட்டிடும் பொன் போல்
ஒளிர்ந்திடும் நேயர்கள்
வற்றாச் சுரங்கத்தின்
வலம்புரியே!
வள்ளல்ப் பெருந்தகையோர்
வாழிய வாழியவே!.
நன்றி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...