” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி
“எழுத்தின் வித்தே பூத்தெழு தமிழே ”
08.08.2023

முளைத்திடும் போதே
முத்தமிழ் பொழிவை
தாங்கிடும் வித்தே
மொழிகளின் பிறப்பில்
முதல் மொழியான
தாய் மொழி தமிழே
தன்னிகர் இல்லா
முத்தமிழ் பொழிவே!!

உள்ளம் கையில் உலகம் சிறைப்பட்ட போதும்
தேசப்பரப்பெல்லாம்
சிதறிய தமிழ் இனம்
பூத்தெழும் தமிழ் மொழியால் மழையாய் இணைந்திடும்!!

அடுத்த தலைமுறை
தரணியில் உரம் பெற
பல மொழி சேர்ப்பிலும்
தமிழ் மொழி வித்தே நம்
தலைமுறை பேணிடும்!!!
நன்றி
தவக்குமார்

Nada Mohan
Author: Nada Mohan