இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன்
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*மணி*

குப்பையிலே மின்னுவதோ
குண்டுமணி

உப்புவளர் கடல் தருமே
முத்துமணி

நெற்கதிரில் மிளிருமந்த நெல்மணி

கற்றிட இணைவாகும்
கண்மணி

கதிர் எழும்முன் எமையெழுப்பும் காண்டாமணி

துதிக்கும்பெண் ஒளிர்விப்பாள் தூண்டாமணி

நங்கையவள் அணிகளிலோ நவமணி

கருக்கவிகள் நமக்களித்தார் கவிமணி

மணிகளதும் மண்ணினிலே பலவிதம்
மகிழ்விக்கும் அதுதானே
அனுதினம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading