திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன்
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*மணி*

குப்பையிலே மின்னுவதோ
குண்டுமணி

உப்புவளர் கடல் தருமே
முத்துமணி

நெற்கதிரில் மிளிருமந்த நெல்மணி

கற்றிட இணைவாகும்
கண்மணி

கதிர் எழும்முன் எமையெழுப்பும் காண்டாமணி

துதிக்கும்பெண் ஒளிர்விப்பாள் தூண்டாமணி

நங்கையவள் அணிகளிலோ நவமணி

கருக்கவிகள் நமக்களித்தார் கவிமணி

மணிகளதும் மண்ணினிலே பலவிதம்
மகிழ்விக்கும் அதுதானே
அனுதினம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading