அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 227 ]

“மணி”

அதிகாலையில் துயிலெழுப்பும் காண்டா மாணியோசை
ஆலய வாசலுக்கு வரவழைக்கும் ஆயத்தமணியோசை
மதங்களுக்குள் பேதமில்லை மணி ஓசையிலும் குரோதமில்லை
ஆலயங்கள் அனைத்துமொன்றாய் ஆண்டவனைத் துதிக்கையிலே

மணியோசையின் இசை சங்கீத நாதவோசை எழுப்புதையா
ஆலைகளில் தொழிற்சாலைகளில் மணிஒலி ஆளுதையா
ஒழுக்கம் சீர் சிறப்பாக்க மணி ஆட்சிசெய்யுதையா
ஆபத்து அனர்த்தம் எதுவாயினும் எச்சரிக்கை மணி அடிக்குதையா

மணியில் அலகுவைத்து நேரக்கட்டுப்பாட்டையும் மணி காக்குதையா அழகூட்டும் அலங்கார வேலையிலும் மணி இடம் பிடிக்குதையா
விஞ்ஞான யுகத்தின் வேகக்கதியிலும் மணிகாட்டுதையா உற்பத்தியை உருவாக்கும் அளவுக்கணிப்பை மணிக்கணக்கில் சொல்லுதையா
மனித முளைவளர்ச்சி கண்டு மனித குலமே மணிக்கணக்காய் வியக்குதையா!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading