அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

மணி

மணியின் ஒலிச்சத்தம் மனைக்குக் கேட்டால்
மகிழ்வைத் தருமென்பது முதியோர் வாக்கு
பணிக்குச் செல்ல பள்ளியெழுப் புகின்றமணி
பள்ளிச் சிறார்களை பக்குவப் படுத்தும்

மணியின் கடமை மனுநீதி சொன்னது
மலரும் பொழுதில் காண்டா மணியோசை
புலரும் பொழுதை புகட்டிடும் ஆலயமணி
தலத்தின் கதவில் தொங்கிடும் மணிகள்

திறக்கையில் ஒலித்து துதிபாட வைக்கும்
தூண்டா மணிவிளக்கு தினமும் எரியும்

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading