இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1830!

அகதி நாம் பெற்ற வரமா?…

ஆண்டுகள் ஒவ்வொன்றும் அழகாய்த்தான் கடக்குது
அதிலே ஒரு நாள்
அகதிகளை நினைக்க வைக்குது
அவரவர் பாடுகள் அவரவர்
கைகளிலே
ஆனால் அகதிகளின்
துயர்பாடு இன்னும்
தொடர்கின்ற சரித்திரச்
சகதியிலே!

நமக்குமட்டுமா என்றெண்ணிப் பார்த்தால்
நாடு நாடாய் அலையுதே மனிதம் அகதியெனும் நாமம் ஏந்தி
இவர் வாழ்வு சாபமா அல்லது
மனிதரே மனிதருக்கு அளிக்கும்
தண்டனைச் செருக்கா!

விடிவொன்று நாம் தேட விடையொன்று
கிட்டட்டும்
முடிவாகும் நம் காலத்தில் அகதியெனும் வார்த்தை வழக்கொளிந்து போக!!
சிவதர்சனி இராகவன்
21/6/2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading