திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1830!

அகதி நாம் பெற்ற வரமா?…

ஆண்டுகள் ஒவ்வொன்றும் அழகாய்த்தான் கடக்குது
அதிலே ஒரு நாள்
அகதிகளை நினைக்க வைக்குது
அவரவர் பாடுகள் அவரவர்
கைகளிலே
ஆனால் அகதிகளின்
துயர்பாடு இன்னும்
தொடர்கின்ற சரித்திரச்
சகதியிலே!

நமக்குமட்டுமா என்றெண்ணிப் பார்த்தால்
நாடு நாடாய் அலையுதே மனிதம் அகதியெனும் நாமம் ஏந்தி
இவர் வாழ்வு சாபமா அல்லது
மனிதரே மனிதருக்கு அளிக்கும்
தண்டனைச் செருக்கா!

விடிவொன்று நாம் தேட விடையொன்று
கிட்டட்டும்
முடிவாகும் நம் காலத்தில் அகதியெனும் வார்த்தை வழக்கொளிந்து போக!!
சிவதர்சனி இராகவன்
21/6/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading