ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-14

27-06-2023

பசுமை
பச்சை செடி வளர்ந்து மரமாகி
படர்ந்துள்ள அழகும்
பண்ணிசைக்கும் பறவைகளின்
குரல்களும்
வந்தாடும் மனங்களில்
பசுமையாய்
அகன்றோடும் நிலை நின்ற
மனவழுத்தம்.

பச்சைக் கம்பளம் விரித்தால் போல்
நெல்மணியும்
பசும்புல்லை நனைத்திடும்
பனித்துளிகளும்
கண்ணிற்கு மட்டுமா குளிர்ச்சி
எம் மண்ணிலும் தடுத்திடும் வறட்சி

மனிதன் அளித்தான் காடுகளை
காட்டுத்தீ அளிக்குது நாடுகளை
வெயிலும் வெளுத்து வாங்குது
நிலங்களும் வெடித்து ஒடியுது
கடலலையும் பூமியை அழிக்குது

விதைகளைப் போட்டு மரங்களை நாட்ட
வேண்டிய பசுமையை மீண்டும் காக்க
தோன்றிய நோயும் அகன்று போக
நீண்டு நிலைக்கும் ஆயுளும் எமக்கு.

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading