முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

இரா.விஜயகௌரி

வரம் பெற்ற அகதிகள்……..

திசைகளெல்லாம் சிதறி நின்று
அகதிகளாய் முத்திரைக்குள் -தின
அவலங்களின். பின்னலிலே
அலட்சியத்தின். விதைகளாய் நாம்

குடும்பங்கள் குலைந்தன -நம்
மொழிமறந்து. மலைத்து நின்றோம்
விட்டெறிந்த. கற்களாய். நாம்
அடித்தளத்தை. தொலைத்து. நின்றோம்

உழைத்தோம் களைத்தோம் மலைத்தோம்
நிலைத்தோம் என்றால் நிலையில்லை
சளைத்தவர் நாமா. என்றலைந்தோம்
சகதிக்குள்ளும் பொன் நிறைத்தோம்

உயிர்ப்பினை கெடுத்து உயிர்நிலைத்தோம்
உறவின் நெருக்க வலுவிழந்தோம்-போலி
திரைக்குள் நாடக வாழ்வமைத்தோம்
சிறகுகள் விரிக்க குஞ்சிழந்தோம்

வரமும் சாபமும் நமக்குள்ளே
வலுவை. இழந்தவர் வாழ்விழந்தோம்
இழப்புத் நிலைப்பும். சீர்தூக்கின்
வரத்துள் தொலைந்த அகதிகள். நாம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading