20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிசில் இருந்து. தலைப்பு : *இயற்கை* காலப் பருவத்தின் கண்மயக்கும் கலையழகில் ஞாலக் கோலங்கள் நாற்றிசையும் எழிலாக கோல மயிலாட குவலயத்தின் குயில் பாட நீலக் கடலாட நீந்துமீன் நின்றாட காலைப் பொழுதாக கதிரொளியும் களிப்பூட்ட சோலை வனமெங்கும் செழித்தாங்கே தழைத்தோங்க மாலைப் பொழுதாக மதிநிலவு மனதாள சாலைத் தெருமரங்கள் சாய்ந்தாடி தென்றல்தர அருவி மலையிருந்து அடங்காமல் உருண்டோட குருவி மரத்திருந்து கூச்சலிட்டு குதூகலிக்க அரும்பு மொட்டுக்கள் அழகழகாய் அலர்ந்திருக்க சுரும்பும் சுற்றிவந்தே சுவைத்தேதான் தேனுண்ண இயற்கை என்கின்ற இன்பத்தாய் இத்தரையே மயக்கும் கலையழகில் மனதையே ஆள்கின்றாள் அயரா அன்னையவள் அனுதினமும் எமக்கானாள் தயவாய்க் காப்போமே தரணியாம் தாயவளை .
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
சிவமணி புவனேஸ்வரன்
சுவிசில் இருந்து.
தலைப்பு : *இயற்கை*
காலப் பருவத்தின் கண்மயக்கும் கலையழகில்
ஞாலக் கோலங்கள் நாற்றிசையும் எழிலாக
கோல மயிலாட குவலயத்தின் குயில் பாட
நீலக் கடலாட நீந்துமீன் நின்றாட
காலைப் பொழுதாக கதிரொளியும் களிப்பூட்ட
சோலை வனமெங்கும் செழித்தாங்கே தழைத்தோங்க
மாலைப் பொழுதாக மதிநிலவு மனதாள
சாலைத் தெருமரங்கள்
சாய்ந்தாடி தென்றல்தர
அருவி மலையிருந்து அடங்காமல் உருண்டோட
குருவி மரத்திருந்து கூச்சலிட்டு குதூகலிக்க
அரும்பு மொட்டுக்கள் அழகழகாய் அலர்ந்திருக்க
சுரும்பும் சுற்றிவந்தே சுவைத்தேதான் தேனுண்ண
இயற்கை என்கின்ற இன்பத்தாய் இத்தரையே
மயக்கும் கலையழகில் மனதையே ஆள்கின்றாள்
அயரா அன்னையவள் அனுதினமும் எமக்கானாள்
தயவாய்க் காப்போமே தரணியாம் தாயவளை .
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...