29
Apr
கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர்...
29
Apr
புழுகு வெடி (392) 30.04.2026
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிசில் இருந்து. தலைப்பு : *இயற்கை* காலப் பருவத்தின் கண்மயக்கும் கலையழகில் ஞாலக் கோலங்கள் நாற்றிசையும் எழிலாக கோல மயிலாட குவலயத்தின் குயில் பாட நீலக் கடலாட நீந்துமீன் நின்றாட காலைப் பொழுதாக கதிரொளியும் களிப்பூட்ட சோலை வனமெங்கும் செழித்தாங்கே தழைத்தோங்க மாலைப் பொழுதாக மதிநிலவு மனதாள சாலைத் தெருமரங்கள் சாய்ந்தாடி தென்றல்தர அருவி மலையிருந்து அடங்காமல் உருண்டோட குருவி மரத்திருந்து கூச்சலிட்டு குதூகலிக்க அரும்பு மொட்டுக்கள் அழகழகாய் அலர்ந்திருக்க சுரும்பும் சுற்றிவந்தே சுவைத்தேதான் தேனுண்ண இயற்கை என்கின்ற இன்பத்தாய் இத்தரையே மயக்கும் கலையழகில் மனதையே ஆள்கின்றாள் அயரா அன்னையவள் அனுதினமும் எமக்கானாள் தயவாய்க் காப்போமே தரணியாம் தாயவளை .
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
சிவமணி புவனேஸ்வரன்
சுவிசில் இருந்து.
தலைப்பு : *இயற்கை*
காலப் பருவத்தின் கண்மயக்கும் கலையழகில்
ஞாலக் கோலங்கள் நாற்றிசையும் எழிலாக
கோல மயிலாட குவலயத்தின் குயில் பாட
நீலக் கடலாட நீந்துமீன் நின்றாட
காலைப் பொழுதாக கதிரொளியும் களிப்பூட்ட
சோலை வனமெங்கும் செழித்தாங்கே தழைத்தோங்க
மாலைப் பொழுதாக மதிநிலவு மனதாள
சாலைத் தெருமரங்கள்
சாய்ந்தாடி தென்றல்தர
அருவி மலையிருந்து அடங்காமல் உருண்டோட
குருவி மரத்திருந்து கூச்சலிட்டு குதூகலிக்க
அரும்பு மொட்டுக்கள் அழகழகாய் அலர்ந்திருக்க
சுரும்பும் சுற்றிவந்தே சுவைத்தேதான் தேனுண்ண
இயற்கை என்கின்ற இன்பத்தாய் இத்தரையே
மயக்கும் கலையழகில் மனதையே ஆள்கின்றாள்
அயரா அன்னையவள் அனுதினமும் எமக்கானாள்
தயவாய்க் காப்போமே தரணியாம் தாயவளை .
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...