அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

கண்ணிய வாழ்வு..

மலர்க்கொடியொன்று
மண்ணிலே மலர்ந்து
வளர்ந்து வரும் வேளை
படரும் கொம்பொன்றைப்
பார்த்து நிமிர்ந்து படரும் வேலை
களையெடுக்க வந்தவன் -அதன்
தலையையும் எடுத்துவிட்டானே

மண்ணிலே மலர்ந்தது
மலர்க்கொடியல்லவா- அதன்
வனப்பு யாருக்குப் புரியும் -அதன்
வாசத்தை யார் தான் அறிவார்
பிச்சிப் பூவானவள்- அவள்
ஒரு பேச்சியானாள்
தரமறியாமல் நின்றதனால்- நல்ல
தரமறியாமல் அழிந்து
விடுவார்,

கனமறியாத இடமதில் நின்றால்
நல்ல மனமதுவும் உடைந்து போகும்
தினம் தினம் கண்ணீர்- என்றும்
தீராது சோகம்
இடம் பார்த்துப்பழகு- நல்ல
நிலையுன்னைத் தொடரும்
களை எடுக்கும் நிலை யல்ல ,
கண்ணிய வாழ்வு என்றும்,,

– சிவரூபன் சர்வேஸ்வரி
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading