இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஜதுர்ஷிகா விஜயகுமார்

என் நண்பியே எல்லாமே

இசை எனக்கு
பிடிக்கும் என்றேன்.
சங்கீதத்திலே பெயர்
வைத்து கொண்டாய்.

உன்னுடன் பழகுவது
பிடிக்கும் என்றேன்.
இன்னும் நெருக்கமாக
பழகி கொண்டாய்.

உன்னை எனக்கு
பிடிக்கும் என்றேன்.
அதை விட என்னை
பிடிக்கும் என்றாய்.

உன் கண்ணழகு
பிடிக்கும் என்றேன்.
கண்ணால் மௌனமாய்
பேசிக் கொண்டாய்.

உன்னை பிரிவதில்
விருப்பம் இல்லையென்றேன்.
உன்னுடனே என்னை
அழைத்து செல்கின்றாய்.

என்றும் உன் உயிர்
நண்பியாக நான்
இருக்க உன்னுடைய
இதயத்தில் எனக்கு
இடம் கொடுப்பாயா?

விஜயகுமார் ஜதுர்ஷிகா
முல்லைத்தீவு உடுப்புக்குளம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading