அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

ஜதுர்ஷிகா விஜயகுமார்

என் நண்பியே எல்லாமே

இசை எனக்கு
பிடிக்கும் என்றேன்.
சங்கீதத்திலே பெயர்
வைத்து கொண்டாய்.

உன்னுடன் பழகுவது
பிடிக்கும் என்றேன்.
இன்னும் நெருக்கமாக
பழகி கொண்டாய்.

உன்னை எனக்கு
பிடிக்கும் என்றேன்.
அதை விட என்னை
பிடிக்கும் என்றாய்.

உன் கண்ணழகு
பிடிக்கும் என்றேன்.
கண்ணால் மௌனமாய்
பேசிக் கொண்டாய்.

உன்னை பிரிவதில்
விருப்பம் இல்லையென்றேன்.
உன்னுடனே என்னை
அழைத்து செல்கின்றாய்.

என்றும் உன் உயிர்
நண்பியாக நான்
இருக்க உன்னுடைய
இதயத்தில் எனக்கு
இடம் கொடுப்பாயா?

விஜயகுமார் ஜதுர்ஷிகா
முல்லைத்தீவு உடுப்புக்குளம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading