இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ரஜனி அன்ரன்

“நேயம்”…..கவி…..ரஜனி அன்ரன் (B.A) 17.08.2023

உயிரோடும் உயிர்ப்போடும் வாழ
உன்னதமானது நேயம்
நேசம் கொண்டு நேயம் காப்போம்
அறிவிருந்தும் ஆளுமை இருந்தும்
அதிகார பலம் இருந்தும்
நேயம் இன்றிய வாழ்வு
நேசமில்லா சுயநல வாழ்வே !

அவலக் குரல் கேட்டால்
துடித்தெழும் வேகமும்
ஆதரவுக் கரம் கொடுக்கும் இணைவும்
ஆபத்தில் கை தூக்கிவிடும் நேயமும்
மனிதநேயப் பண்புகள்
நேயம் காப்போம் நேசத்தோடு !

பொன்னைப் பொருளை மண்ணைத் தேடி
அலைந்து திரிகிறான் மனிதன் இன்று
சொந்த பந்தம் சுற்றுச்சூழல் மறந்து
சுற்றித் திரிகிறான் சுயநலவாதியாய்
மனச்சாட்சியை விற்றுப் பிழைப்பு நடாத்தி
குளிர் காய்கிறான் மகிழ்வோடு
வாழ்வோம் நேயத்தோடு
மலரட்டும் எங்கும் மனிதநேயம் !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading