பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

என்று தீரும்!

தீராத வலியோடு
தீர்ந்து போகும்
இவர் வாழ்க்கை..
நீறாகிப் போனதோ
நீத்தே தான்போனாரோ
அறியாத ஏக்கம்..!

பெற்றவருக்குத் தான்
தெரியும் பிள்ளையின்
பிரிவின் வலி
உற்றவரே உணர்வார்
உறவுகளின் நிர்க்கதி!

விடையற்ற வினாவாக
விளைவு குன்றிய செயலாக
இன்னும் தொடரும்
எல்லையில்லா ஏக்கம்..!

காலங்களை நீட்டியும்
கண்மூடிய போக்கும்
உயிர்களை மதியா அரசும்
வீணாகிப் போகுது தேசமும்..!

யாரால் முடியும்
ஐ நா அன்றி அந்த ஆண்டவன்
அல்லது அதை மீறிய
ஏதேனும் சக்தியுண்டா
சொல்லுவீர் அறியா
எந்தனுக்கு…!
சிவதர்சனி இராகவன்
23/8/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading