இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நகுலா சிவநாதன்

என்று தீருமோ?

வென்று நாமும் வாழ்வதற்கு
வெற்றிக்கொடி நடுவதற்கு
சென்ற எம் சிட்டுகள்
திரும்பி வருவாரோ?

தேடும் உறவுகளின் அவலம்
தேசவழிகளில் கண்கள்
கூடும் நம்உறவுகள் கண்ணீர்
எப்போ தீரும்

பேரிடரின் அவலத்தில்
ஊரிடமே உணர்வாகக் கேட்கிறோம்
விழி வைத்து பார்க்கிறோம்
விடை தருவார் யாரோ

கொடிய பசி எமை வாட்ட
கொலுவிருக்கும் என்பிள்ளை
எப்போ வருவான்? ஏக்கங்கள் சூழ
விடை தெரியா பாதையாக
விசும்பும் மக்கள்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading