இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 231

அரச மரம்

நிழல் தரும்
அரச மரம்
நீதி தருமா
சொல் மனமே!

கதை சொல்லும்
வரலாற்றில்
பரிநிர்வாணம்
புத்தருக்கு
உனது அண்டை
தந்ததாலே!

பரந்த ஈழத்தில்
பார்க்கும்
இடமெல்லாம்
பௌத்த புத்தர்
சிலை வைத்து

உன் பாதம்
வைத்த இடமென்று
விகாரைகள்
உருவாகும்
விகார மனங்களை
காண்கின்றோம்

அகிம்சை அற்ற
ஆன்மீகம்
அதிருப்தி தரும்
தார்மீகம்

மண் காக்க
அரச மரத்தை
சாய்த்திடுவோமா
சொல். மனமே!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading