ரஜனி அன்ரன்

“ வேலாயுதம் ஐயா “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 31.08.2023

எழிலான காரைநகரில் பிறந்து
ஒயிலான ஒல்லாந்து நாட்டினில் வசித்து
ஐக்கியராச்சியத்தில் ஐக்கியமாகி
ஐரோப்பிய வலச் செய்திகளோடு
இருபத்தியாறு வருடங்கள் பயணித்து
அதிரடியாக ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்ற
வேலாயுதம் ஐயாவிற்கு எமது அஞ்சலிகள் !

பத்திரிகை நிருபராய் நாடக நடிகனாய்
திரைப்பட நடிகனாய் தயாரிப்பாளனாய்
செய்தியாளனாய் பல்துறைக் கலைஞனாய் வாழ்ந்து
புலம் பெயர்ந்து வந்த போதும்
கலைத் தாகத்தோடு செயற்பட்ட
கலைஞனாம் வேலாயுதம் ஐயாவை
காலனும் அழைத்தானே கடுகதியில் !

அன்றில் இருந்து இன்றுவரை
ஒல்லாந்து செய்திகளோடு தொடங்கிய பயணம்
ஐரோப்பிய செய்திகளாக பரந்து விரிந்து
இறுதி மூச்சு வரை உறுதியோடு செயற்பட்டு
தீராக் காதலோடு ரி ஆர் ரியை நேசித்து
காதோரம் ஒலித்த குரல் காற்றோடு கலந்ததுவே !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading