பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ வேலாயுதம் ஐயா “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 31.08.2023

எழிலான காரைநகரில் பிறந்து
ஒயிலான ஒல்லாந்து நாட்டினில் வசித்து
ஐக்கியராச்சியத்தில் ஐக்கியமாகி
ஐரோப்பிய வலச் செய்திகளோடு
இருபத்தியாறு வருடங்கள் பயணித்து
அதிரடியாக ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்ற
வேலாயுதம் ஐயாவிற்கு எமது அஞ்சலிகள் !

பத்திரிகை நிருபராய் நாடக நடிகனாய்
திரைப்பட நடிகனாய் தயாரிப்பாளனாய்
செய்தியாளனாய் பல்துறைக் கலைஞனாய் வாழ்ந்து
புலம் பெயர்ந்து வந்த போதும்
கலைத் தாகத்தோடு செயற்பட்ட
கலைஞனாம் வேலாயுதம் ஐயாவை
காலனும் அழைத்தானே கடுகதியில் !

அன்றில் இருந்து இன்றுவரை
ஒல்லாந்து செய்திகளோடு தொடங்கிய பயணம்
ஐரோப்பிய செய்திகளாக பரந்து விரிந்து
இறுதி மூச்சு வரை உறுதியோடு செயற்பட்டு
தீராக் காதலோடு ரி ஆர் ரியை நேசித்து
காதோரம் ஒலித்த குரல் காற்றோடு கலந்ததுவே !

Nada Mohan
Author: Nada Mohan