இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கீத்தா பரமானந்தன்

விடுமுறைக்களிப்பு
உள்ளத்தில் உவகை பூக்க
உற்சாக மின்னல் தோன்றும்!
எண்ணமோ இறக்கை கட்டும்
எதிர்பார்ப்பில் கணங்கள் ஏங்கும்!

மழை கண்ட பூமியாக
மலர்ந்திடும் உறவுப் பூக்கள்!
மருவிய சொந்த பந்தம்
மருக்கொழுந்தாக மணக்கும்!

நாட்களும் விரைந்தே ஓடும்
நவமுடன் உலகும் தோன்றும்!
காலத்தின் கணக்காம் சுற்றல்
கனதியாம். கடமை சொல்லும்!

கண்களும் தூறல் கூட்ட
காசதும் கையைக் கடிக்க
வெல்லமாய் நினைவு தாங்கி
விடுமுறை முடிவுகாணும்!

நெஞ்சமும் ஈரங்கண்டே
நித்திய வாழ்வை மீட்ட
விடுமுறைக் களிப்பின் தடங்கள்
வீச்சுடன் வாழ்வை நகர்த்தும்!

கீத்தா பரமானந்தன்05-09-23

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading