பண்படுமோ பண்பாடு 759 23.04.2026

செல்வி நித்தியானந்தன் பண்படுமோ பண்பாடு மண்ணிலே பண்பாட்டால் பலருக்கு வேதனை பகுத்தறிவு தொலைத்து பணமழிக்கும் போதனை பள்ளியில்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

விடுமுறைக்களிப்பு
உள்ளத்தில் உவகை பூக்க
உற்சாக மின்னல் தோன்றும்!
எண்ணமோ இறக்கை கட்டும்
எதிர்பார்ப்பில் கணங்கள் ஏங்கும்!

மழை கண்ட பூமியாக
மலர்ந்திடும் உறவுப் பூக்கள்!
மருவிய சொந்த பந்தம்
மருக்கொழுந்தாக மணக்கும்!

நாட்களும் விரைந்தே ஓடும்
நவமுடன் உலகும் தோன்றும்!
காலத்தின் கணக்காம் சுற்றல்
கனதியாம். கடமை சொல்லும்!

கண்களும் தூறல் கூட்ட
காசதும் கையைக் கடிக்க
வெல்லமாய் நினைவு தாங்கி
விடுமுறை முடிவுகாணும்!

நெஞ்சமும் ஈரங்கண்டே
நித்திய வாழ்வை மீட்ட
விடுமுறைக் களிப்பின் தடங்கள்
வீச்சுடன் வாழ்வை நகர்த்தும்!

கீத்தா பரமானந்தன்05-09-23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading