இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

விடுமுறை

ஏந்திரக் கூடுகளாயே
எம்மவர் இயக்கம்
தந்திரம் செய்தே வீழ்த்தும்
வேலைப்பளுவும் மயக்கி
மந்திரச் சொல்லும்
மாறையே செய்யும்
மழுங்கிடத் தயக்கத்தையே எய்யும்
காவு திறனற்று உணர்வும் ஓயும்
களைப்புற்று மெய்யும் சாயும்
கடினமும் கண்களில் புகும்
மாட்டியே விழிப்போம்
மத்தளம் போன்று
மனதிலே மகிழ்வு அகன்று

இரக்கமற்றே குடையும் இவ்வாறு நடைமுறை
இதனைச் சீராக்கம் செய்யவருமே விடுமுறை

வந்தால் விடுமுறை
வாசலும் விரியும்
சுந்தர நிகழ்வுகளைச்
சுகிக்கத் தூண்டும்
சொந்தங்களும் இணையும்
சொற்பலவும் உலவும்
சந்தச் செறிவால்
சமரசம் நிலவும்
நொந்த இதயத்தின்
நோவும் சுருங்கும்

உறவுச் சீண்டலால் சோர்வும் மறையும்
மறந்தும் போகும்
மனது பட்டவலி
பறக்கும் உடலும்
பரவசம் முற்றி
இறக்கை கட்டி
மீண்டெழும் மிடுக்கும்
பிறக்கும் புறத்திலும்
பிற்பல புதுமைகள்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading