06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
12.09.23
ஆக்கம் -114
மலைப்பு
உறங்க மறுத்த விழிகளின்
தன் ஊமைப் பசிக்கு
உணவாக்கிய பிரமிப்பு
ஆறறிவு மனிதனை
மலைப்பாம்பு முழுதாய்
விழுங்கிய மலைப்பு
வானளவு உயர்ந்த கட்டிடம்
சிங்கப்பூரில் பார்த்து
மகிழ்ந்த வியப்பு
குதித்துக் குதித்து கொதித்து
எழுந்து குரல் எழுப்பும்
கனடா நயகரா நீர்வீழ்ச்சி
கண்ட பிரமிப்பு
இராமேஸ்வரம் போகும்
வழியில் பாம்பன் பாலம்
கடந்தது திகைப்பு
இறங்கி நின்று பார்த்ததும்
அலைகடல் துரத்தி துள்ளி
எழுந்த நுரை அள்ளித்
தலையில் கொட்டியதும்
அலையின் உழைப்போ
மலைப்பானது .
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.