ரஜனி அன்ரன்

தீர்வினைத் தருமா தற்கொலைகள் ?…..கவி….ரஜனி அன்ரன்(B.A) 14.09.2023

ஒட்டுமொத்த உலகினையும்
அச்சொட்டாய் ஆட்டிப் படைக்குது
தற்கொலை முடிவுகள்
ஒருவரின் சுயவிருப்பின் பேரில்
நொடிப்பொழுதில் எடுக்கும் விபரீதமே தற்கொலை
தற்கொலையை அறவே தவிர்க்க
ஆண்டு தோறும் செப்டெம்பர் பத்தாம் நாளை
தற்கொலைத் தவிர்ப்பு நாளாக்கியதே ஐ.நா.மன்றும் !

தோல்வி ஏமாற்றம் விரக்தி
தனிமை அச்சம் மனஅழுத்தமென
தற்கொலைக்கு காரணங்கள் பலவாக
உலகில் ஒரு வருடத்தில்
எட்டுலட்சம் தற்கொலைகள் அரங்கேறுதே !

கனவுகளைப் புதைத்து கடமைகளை மறந்து
எதிர்காலத்தை உதறித் தள்ளி
குடும்ப உறவுகளைத் தவிக்கவிட்டு
குறுகிய நொடியில் வெறுப்போடு எடுக்கும் முடிவு
தீர்வினைத் தான் தருமா ?
அமைதியான வாழ்வில் சூறாவளி வீசும் போது
தற்கொலையை நாடுகிறது மனங்கள்
தவிர்ப்போம் தற்கொலையை
கொடுப்போம் உசாத்துணையை !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading