இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

இரா.விஜயகௌரி

புலம்பெயர் தமிழர்களே……….

புலம்பெயர் தமிழர்களே
புரியாமல் ஒரு கேள்வி
வாழ்வின் வேள்வியில் நாம்
நிலைகுலைந்த நொடியேது

இதய அழுத்தத்தால் இடர்பாடு
இன்னல்களுள் நெருடி எழும்சிறுநொடிகள்
காலச்சக்கரத்தை. பாதத்துள்
கடிகார முள்ளுக்குள் அழுத்தி வைத்தோம்

சொத்தும் சுகமும் கரைபுரள
சொல்லாமல் நாம் கரையும் இறுதி நொடி
தமிழருக்கே அதிகமென்றால் ஏன்
உணவா உழைப்பா அதிர்வலைகள் எங்கே

சிதறிப்போய் விடுவோமா சிந்திக்கத்தவறின்
பெரும் மூட்டை சுமந்து பேரவதி கொண்டு
அழுத்தும் சுமையால் அடங்குகின்றோம்
துடிக்கும இதயத்தை அறிவீரோ

ஆம் நிஜமிது நமக்கே அதகமாம்
புலம்பெயர் அகதித்தமிழர்களே
அலைந்து குலைந்தது போதும்
வாழ்வின் பொருளுணர்ந்து வடிவமைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading