நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

இரா.விஜயகௌரி

புலம்பெயர் தமிழர்களே……….

புலம்பெயர் தமிழர்களே
புரியாமல் ஒரு கேள்வி
வாழ்வின் வேள்வியில் நாம்
நிலைகுலைந்த நொடியேது

இதய அழுத்தத்தால் இடர்பாடு
இன்னல்களுள் நெருடி எழும்சிறுநொடிகள்
காலச்சக்கரத்தை. பாதத்துள்
கடிகார முள்ளுக்குள் அழுத்தி வைத்தோம்

சொத்தும் சுகமும் கரைபுரள
சொல்லாமல் நாம் கரையும் இறுதி நொடி
தமிழருக்கே அதிகமென்றால் ஏன்
உணவா உழைப்பா அதிர்வலைகள் எங்கே

சிதறிப்போய் விடுவோமா சிந்திக்கத்தவறின்
பெரும் மூட்டை சுமந்து பேரவதி கொண்டு
அழுத்தும் சுமையால் அடங்குகின்றோம்
துடிக்கும இதயத்தை அறிவீரோ

ஆம் நிஜமிது நமக்கே அதகமாம்
புலம்பெயர் அகதித்தமிழர்களே
அலைந்து குலைந்தது போதும்
வாழ்வின் பொருளுணர்ந்து வடிவமைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan