20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ரஜனி அன்ரன்
தியாகமே தீர்ப்பானதா ? கவி…..ரஜனி அன்ரன் (B.A)…..21.09.2023
பட்டினி மறந்து பசித்தீயை ஒறுத்து
பன்னிருநாள் வேள்வியிலே
பற்றின பற்றால் மொழிப்பற்றால் இனப்பற்றால்
பாரே வியந்து நிற்க நாமும் பார்த்திருக்க
பற்றினான் தியாகத்தின் உச்சத்தை
பார்த்தீபனாம் எங்கள் அண்ணல்
பார்த்தீபனின் தியாகம் தீர்ப்பானதா?
பாராமுகமாக இருந்த பாரதமே பதில்சொல்லு !
ஆண்டுகள் முப்பத்தியாறு ஆனபோதும்
பார்த்தீபனின் தியாகமும்
சாத்வீகப் பயணமும்
சாத்தியம் ஆகவில்லை இன்னும்
தீராத பசியோடு தான் இன்னமும்
பார்த்தீபனின் தியாகமும் கனவானதே !
அறவழிப் போருக்கு அத்திவாரமிட்டு
அகிம்சையெனும் ஆயுதமேந்தி
தன்னை உருக்கி தீபமாய் ஒளிர்ந்து
தியாகியான பார்த்தீபனின்
தியாக நினைவேந்தலை நினைவுகூரவே
நீதிமன்றமே தடை போடும் போது
தியாகம் எப்படித் தீர்ப்பாகும் ?
தீர்ப்பும் இல்லை தீர்வும் இல்லையே !
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...