இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

இரா.விஜயகௌரி

தியாகமே தீர்ப்பானதா

ஊரெழு மண் உதித்து
உயிர்ப்புடன் தமிழ் விதைத்து
ஊனுடல் தம்மைத்தாமும்
விருப்புடன் எழுதி. வைத்தான்

பசிக்கொரு. விடை. கொடுத்து
பெரும் பசி கொண்டெழுந்த
அன்பினில் விளைந்த முத்து-அவன்
அகிலத்துள் அகிம்சை சொன்னான்

தியாகத்தின் ஆழிமுத்து-அவன்
தமிழினத்தின் வரத்தின் வைரம்
நெஞ்சம் நிறைந்ததாம் வீர மைந்தன்
அவன் உரைத்தவை உயிர் பெறுமோ

பொருள் நிறை அவன் பணி தான்
உயிர்த்தெழும் உயிர்ப்பாய் வருமோ
தலைமுறை நிலைத்து வெல்ல
தரும் ஒரு உணர்வாய் தொடர்வோ

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading