இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கமலா ஜெயபாலன்

வலைப்பூ
ஓடுகின்ற வாழ்வனிலே உண்மைகளைத் தேடுகிறோம்
ஆடுகின்ற ஆட்டத்தில் அரும்பாடு படுகின்றோம்
வாடுகின்ற மனிதர்களும் வலைத்தளத்தால் உறுளுகிறார்
பாடுபட்டு உழைத்தாலும் பலனில்லை இதனாலே

வலைப்பூ வந்ததினால் வாலிபங்கள் மகிழ்வடைய
தலைப்புத் தெரியாமல் தலைகீழாய் வாழ்வோட
வல்லவர் வாழ்வும் வானுயர்ந்து கோலோச்ச
நல்லவரும் வழிதவறி நாசமாய்ப் போனதுண்டு

உண்மையை அறிந்து உலகினில் வாழ்வோம்
கண்ணின் இமையாய் காப்போம் வையகத்தை
நன்மை அறிந்து நல்லதை எடுப்போம்
துன்பம் வராமற் சுற்றம் காப்போம்/

கமலா ஜெயபாலன் சந்தம் சிந்தும் சந்திப்புக்காக

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading